மகாராஜா பிள்ளை நினைவு நாள்
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள மகாராஜா பிள்ளைக்கு தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். 54 ஆவது மகாராஜா பிள்ளை நினைவு தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் திருநெல்வேலி சபர்ப் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் பிரேமச்சந்திரன் பட்டய தலைவர் மேகலிங்கம் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அவருடைய முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வெங்கடேஷ், பீட்டர் பொன்னையா, ஜோசப், ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் உதவி ஆளுநர் பிரேம சந்திரன் மற்றும் பட்டய தலைவர் மேகலிங்கம் பேட்டி
டாக்டர் கூறும் போது தோன்றின் புகழோடு தோன்றுக என்ற குறளை கூறி மகாராஜா பிள்ளை மகாராஜா நகர் உருவாக்கிய விதம் குறிப்பு மிக சிறப்பாக எடுத்து கூறினார் நகராட்சி தலைவராக இருந்த போது அவருடைய சம்பாதித்த பணங்கள் அனைத்தையும் மக்களுக்காக செலவிட்டார் அவரை வணங்குவோம் என்றார் இதை போல் இந்த சிலையை உருவாக்க அரும்பாடுபட்ட சிலை குழுவின் தலைவரும் சங்கத்தின் பட்டயத் தலைவருமான மேகலிங்கம் கூறும் பொழுது மகாராஜா பிள்ளை இந்த பகுதி மக்களுக்காக ஏராளமான திட்டங்களை செய்துள்ளார் அவருடைய சேவை இந்நாளில் நாம் நினைவு கூறுவோம் என்று கூறினார்















